தென்னை மரங்கள் பல்லாயிரக்கணக்கில் பட்டுப்போய் மொட்டையாக நிற்கும் காட்சி நெஞ்சத்தைப் பதற வைக்கிறது


               டந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. "கல்பதரு' என்று அழைக்கப்படும் தென்னை மரங்கள் பல்லாயிரக்கணக்கில் பட்டுப்போய் மொட்டையாக நிற்கும் காட்சி நெஞ்சத்தைப் பதற வைக்கிறது.
      நூறு ஆண்டுகள் வாழக்கூடிய கற்பக விருட்சம் தென்னை மரம். கற்பக விருட்சம் என்றால் அது தென்னையா, பனையா என்ற கேள்வி எழுப்பப்படலாம். தமிழ் மரபின்படி இரண்டுமே கற்பக விருட்சம்தான். கேரள மரபில் தென்னையே கற்பக விருட்சம். கற்பக விருட்சம் அல்லது கல்பதரு என்பது புராண மரபுதான்.
     இந்திய புராணத்தில் மச்சாவதாரத்தில் ஓர் ஊழிக்கதை உண்டு. ஊழிக்குப் பின் எஞ்சிய மனிதன் சத்திய விரதன். சுமேரிய புராணத்தில் ஊழிக்குப் பின் எஞ்சியவன் நோவா சையு சுத்தா. நோவா சையு சுத்தாவைக் கண்டுபிடித்து சஞ்சீவி ரகசியத்தை அறிந்து கொள்ள கில் காமேஷ் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய குறிப்பு பழைய பைபிளில் உண்டு. சுமேரிய சொர்க்கம் டில்முன், கிரேக்க சொர்க்கம் ஒலிம்பஸ். மரண பயம் இல்லாத உலகம்.
       இந்திய புராணத்தில் மரண பயமில்லாமல் வாழ கடலுக்கு அடியில் உள்ள அமிர்தத்தை எப்படிப் பெறுவது என்ற கேள்வி வந்தபோது, மகாவிஷ்ணு தேவர்களையும் அசுரர்களையும் சமாதானம் செய்து, மகேந்திர பர்வதத்தை மத்தாக்க வாசுகி என்ற மலைப்பாம்பு வடமானது. வாசுகியின் தலைப்பக்கம் அசுரர்களும் வால்பக்கம் தேவர்களும் இழுத்துப் பிடித்துக் கடைய முற்பட்டனர். மகேந்திர மலையை அசைக்க முடியவில்லை. பின்னர் மகாவிஷ்ணு 361 பிரம்மாக்களைக் கொண்ட கூர்மமாக, அதாவது ராட்சஸ வடிவுள்ள ஆமையாக அவதாரமெடுத்து கடலுக்குள் சென்று மகேந்திர மலையைப் புரட்டிக் கொடுத்த பின் திருப்பாற்கடல் கடையப்பட்டு முதலில் வந்தது விஷமே. அதை உண்ட சிவன் திருநீலகண்டரானார்.
       இந்த லீலா விநோதத்தில் அடுத்து வந்தது காமதேனு. அதாவது பசு. பகவான் காமதேனுவை வசிஷ்ட மகரிஷிக்கு வழங்கினார். பின்னர் வந்தது ஐராவதம். அதாவது வெள்ளை யானை. அதை இந்திரன் பெற்றான். இறுதியில் வந்ததுதான் கற்பக விருட்சமான தென்னை. விவசாயம் செய்து மண்ணை வளப்படுத்த பசுவுடன் தென்னையையும் பகவான் முனிவர்களுக்கு வழங்கினார்.
     வேதகால வேளாண்மை என்பது ஆநிரைப் பொருளாதாரம். ஆங்கிலத்தில் டஹள்ற்ர்ழ்ஹப் உஸ்ரீர்ய்ர்ம்ஹ் ஆகும். அதற்கு அடிப்படை பசுக்கள், புற்கள், தென்னை போன்ற பயனுள்ள மரங்கள். கூர்மாவதாரம் எடுத்துக்காட்டும் செய்தி இதுவே. சொல்லப் போனால் முனிவர்கள் நடத்திய குருகுல வாசத்தில் வேதம் படிப்பது தியரி. மாடு மேய்த்து விவசாயம் செய்வது பிராக்டிகல் வகுப்பாகும்.
       ஆநிரைப் பொருளாதாரத்திற்குரிய அடிப்படைத் தேவையான உணவு, உடை, வீடு மூன்றையும் தென்னை நிறைவேற்றியுள்ளது. இன்றளவும் பெரும்பாலான பசிபிக் தீவுகளில் ஆதிவாசிகள் உண்பது தேங்காய். இன்று நல வாழ்வில் அக்கறை கொண்ட சிலர் இயற்கை உணவு மட்டுமே உண்கிறார்கள். சமைத்த உணவைத் தவிர்க்கிறார்கள். அதேசமயம் அவர்களின் இயற்கை உணவில் தேங்காய் பெரும்பங்கு வகிக்கிறது. பச்சை ஓலையை மெலிதாய் நறுக்கி அழகுடன் உடையாக அணியும் மரபு பசிபிக் தீவு ஆதிவாசிகளிடம் உண்டு.
    தாகம் தீர்க்க இளநீர், கப்பலை இழுக்கும் வடக்கயிறு முதல் பல கனபரிமாணங்களில் பலவிதமான கயிறுகள் பல தேவைகளை நிறைவேற்றுகின்றன. தென்னங்கள்ளும், தேங்காய் நெய்யும் அருமருந்துகள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் சாதவாகனர் ஆட்சியில் பொருளியல் வளர்ச்சிக்கு அடிப்படை தென்னை வழங்கிய பொருள்களே. ஆகவே, தென்னைதான் கற்பக விருட்சம் என்று கருதுவதில் என்ன தவறு? தவிரவும் இதன் பொருளாதார முக்கியத்துவத்திற்கு மேல் இந்த நாரியல் அக்கால கட்டத்தில் நரபலியை நிறுத்தியுள்ளதாக வரலாற்று மேதை கோசாம்பி கூறுகிறார்.
    கோவிலில் தேங்காய் உடைப்பது நரபலியின் பதிலி என்கிறார். தேங்காயில் குடுமி, கண்கள் மூக்கு எல்லாம் மனிதத் தலை போல் உள்ளதால் மனித பலியின் பதிலியாக தேங்காயை தெய்வம் ஏற்பதால், இன்றளவும் 30 சதவீதம் தேங்காய் சடங்கு ரீதியான தேவையைப் பூர்த்தி செய்து வருவதாகப் புள்ளிவிவரம் உண்டு.
    தமிழ்நாட்டில் வறட்சியால்தான் தென்னை மரம் பட்டுப் போகிறது. இந்தியாவைப் போல் தென்னை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தென்னையில் லாபம் இல்லையென்று தென்னையை அழித்துவிட்டு, செம்பனை என்ற குட்டை பாமாயில் மரங்களை வளர்க்கிறார்கள்.
    மலேசியாவில் தென்னை அழிப்பு தீவிரமாயுள்ளது. பாமாயில் ஏற்றுமதியில் மலேசியா முதலிடம். பாமாயில் இறக்குமதியில் இந்தியா முதலிடம், பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டால் மலேசியப் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும்.
    கடந்த 20 ஆண்டுகளாக தென்னையைப் பற்றிய தவறான தகவல் பரவியதால் உலகளவில் தென்னைப் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது. தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு நலவாழ்வுக்குப் பகை என்றும் பாமாயில் பரவாயில்லை என்றும் வனஸ்பதி விற்பனையாளர்கள் பரப்பிவிட்ட பொய்ப் பிரசாரம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. சூரியகாந்தி எண்ணெய் மட்டுமே நலவாழ்வுக்கு ஏற்றது என்று பன்னாட்டு சமையல் எண்ணெய் முதலாளிகள் ஊடகங்களில் பொய் விளம்பரம் தந்தார்கள்.
     உண்மையை எவ்வளவு நாள்தான் மூடி மறைக்க முடியும்? இந்தியாவின் பாரம்பரிய மூலிகை அறிவியல் தென்னையை கற்பகமாக ஏற்றுக் கொள்ளும்போது தவறு எப்படி ஏற்படும்? ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்த ஆராய்ச்சியில் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு கரையும் தன்மையுடையது என்றும், ரத்தக் குழாயைத் தடிமனாக்காது என்றும் அறிவித்த பின்னரே இப்போது பழையபடி தேங்காய் எண்ணெய்க்கு மவுசு கூடி வருகிறது. சித்தர்கள் கூறுவதை ஏற்காமல் வெள்ளைக்காரன் சொன்னால் ஏற்கும் என்ற மனநிலை நம்மிடம் உள்ளது.
    நமது உணவில் டால்டா பெரும்பங்கு வகிக்கிறது. சமையலில் டால்டாவைப் பயன்படுத்துகிறோம். டால்டாவில் டிரான்ஸ்ஃபேட் என்று சொல்லப்படும் கரையாத கொழுப்பு 9 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் உள்ளது. அது அப்படியே ரத்தத்தில் சேர்ந்துவிடும். டால்டா பெரும்பாலும் பாமாயில் சரக்குதான். ஆனால் எவ்விதமான ஹைட்ரஜனும் செலுத்தப்படாமல் நெய் போலவே உறையும் சக்தி தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. தேங்காய் எண்ணெயில் டிரான்ஸ் கொழுப்பு 2 சதவீதம் மட்டுமே.
    மேலை நாடுகளில் டால்டாவுக்குத் தேங்காய்ப் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். தங்கள் உடல்நலத்தைப் பாதுகாக்கின்றனர். பசு நெய்யிலும் டிரான்ஸ் கொழுப்பு குறைவே. பொதுவாக, பெரிய கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடும் கலாசாரம் நம்மிடம் பரவிவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கேக்கில் டால்டா உண்டு. டிரான்ஸ் கொழுப்பும் அதிகம். கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு மறுநாள் கொலஸ்ட்ரால் ஏறி மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கும்.
      மகாத்மா காந்தி மாபெரும் சித்தர். வனஸ்பதி என்ற டால்டாவை பயன்படுத்தக் கூடாது என்று கூறி பசு நெய்யைப் பயன்படுத்தச் சொன்னார். பசு நெய்க்கு நிகர் தேங்காய் நெய். தேங்காய் நெய் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகிவிட்டது. சாதாரணமாக தேங்காய் எண்ணெயில் கொப்பரையில் உள்ள கருப்பு சேர்ந்து காரலை ஏற்படுத்தும். தேங்காயிலிருந்து வெள்ளைப் பகுதியை மட்டும் பிரித்து எடுத்தால் தேங்காய் நெய் கிட்டும்.
     1961ஆம் ஆண்டில் மத்திய தேங்காய் வாரியம், அதற்கானதொரு இயந்திரத்தை ஜெர்மனியிலிருந்து வரவழைத்து மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆய்வு மையத்திடம் ஒப்படைத்தது. இத்தகைய தொழில்நுட்பம் இருந்தும் நரசிம்ம ராவ் பிரதமராயிருந்தபோது, தேசிய அளவில் தேங்காய் நெய் உற்பத்திக்கு விண்ணப்பித்திருந்த பல சிறுதொழில் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க மறுத்துவிட்டார்.
    அன்றே தேங்காய் நெய் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், மேலை நாட்டு ஏற்றுமதி தேவையை இந்தியா நிறைவு செய்து பல்லாயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளி பிறந்திருக்கும். தென்னை மரங்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். சற்று காலம் கடந்தாவது தென்னையின் மகத்துவம் உணரப்பட்டுப் பலர் மீண்டும் தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துகின்றனர்.
     திண்டுக்கல் மாவட்டத்திற்கு இயற்கையின் இரண்டு கொடை உண்டு. ஒன்று கொடைக்கானல் மலைத்தொடர். மற்றொன்று சிறுமலை. இரண்டுமே வனப்பகுதி. கொடைக்கானல் - பழனி மலைத்தொடர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அங்கிருந்த அரியவகை சந்தனம், செஞ்சந்தனம், தேக்கு, தான்றி, கடுக்காய், ரோஸ்வுட் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. 2013-இல் அரிய விலங்கினப் பகுதி எனக் கருதி சிறுமலையை பாதுகாப்புப் பகுதியாக அறிவித்துள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் சிறுமலையில் உள்ள அரிய வகை மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன.
    இவ்வாறு வாழ்விழந்த பல்லாயிரக்கணக்காக மரங்களுக்காக நாம் செய்யக்கூடியது, கண்ணீர் அஞ்சலி மட்டுமே.

823 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பரில் 5 முறை 3 தினங்கள்


www.thagavalthalam.com Pasumai Nayagan

           ந்த ஆண்டின் டிசம்பர் மாதம், சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மாத இறுதி நாட்களான, 29, 30, 31 ஆகிய, மூன்று நாட்களும், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் வருகிறது. அது போல், இந்த மாதத்தின், இந்த மூன்று கிழமைகளும், ஐந்து முறை வருகின்றன. இந்த அரிய அமைப்பு, 832 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டு உள்ளது.சிறப்பானது இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகள் ஐந்து முறை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
             இது போல், வழக்கமாக அமைவதில்லை. டிசம்பர் மாத காலண்டரை, பிற மாத காலண்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த சிறப்பு தெரிய வரும். வல்லுனர்களின் கருத்துப்படி, டிசம்பர் மாதம், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகள் ஐந்து முறை வருவது ஒரு அரிய நிகழ்ச்சியாகும்; இத்தகைய அரிய அமைப்பு, 823 ஆண்டுகளுக்கு முன், 1190ம் ஆண்டில் வந்துள்ளது. டிசம்பர் மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்றான, 8ம் தேதி, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன என்பது, இந்த நாளின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.நல்லதல்ல ஒரு மாதத்தின் இறுதி நாட்கள், ஐந்து முறை வருவது நல்லதல்ல என்று, ஜோதிட நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். மேலும், ஞாயிற்றுக் கிழமை ஐந்து முறை வருவது கோப உணர்வுகளைத் தூண்டும்; திங்கள் கிழமை ஐந்து முறை வருவது நல்லது; செவ்வாய்க் கிழமை ஐந்து முறை வருவது செலவைத் தூண்டும் என்றும், ஒரு சில ஜோதிட அறிவியலில் கூறப்பட்டுள்ளது.

குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜில்) வைக்கக் கூடாத 10 பொருட்கள்...



       
பசுமை நாயகன் Pasumai Nayagan

       பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

முலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பாரம்பரிய விதைகள்

   
Pasumai Nayagan www.thagavalthalam.com பசுமை நாயகன்

    சென்னை மாநகரில் இருப்பவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் கேள்விகள் தக்காளியைப் பற்றியவை. ""அங்காடியில் விற்கப்படும் தக்காளிப்பழம் பெரியதாக மைசூர் போண்டாவைப்போல் உள்ளது. தோல் கடினமாக உள்ளது. ருசியும் இல்லை. இது ஏன்?'' புளிப்புள்ள சிறிய தக்காளி மிகவும் அரிதாகிவிட்டது.
""போண்டா தக்காளி'' என்றும் ""பங்களூர் தக்காளி'' என்றும் விற்கப்படும் இனிப்பற்ற தக்காளியின் தோற்றம், மாற்றம், வடிவமைப்பை ஆராய்ந்தால் நிஜமாக அந்தத் தக்காளி ""அசைவத் தக்காளி'' ஆகும். எல்லாம் விபரீத விஞ்ஞான விளைவுதான்.
பங்களூர் இனிப்புத் தக்காளியின் இன்றைய தோற்றம், கனம், எடை, வெளித்தோலின் பரிமாணம் எல்லாம் "ஜீன்' மாற்றத்தில் "மாலிக்யுலர் பயாலஜி' - அதாவது பயோநுட்பத்தில் அணுசக்தி நுழைவின் காரணமே.
இப்படி விளைபவை புற்றுநோயை ஏற்படுத்தும், ரத்த அழுத்தத்தை உயர்த்தும் என்றெல்லாம் எச்சரிக்கைகள் இருந்தாலும் அவை புறக்கணிக்கப்பட்டு "புதிய கண்டுபிடிப்புகள்' என்று கூறி இந்திய விவசாயத்தில் திணிக்கப்படுகிறது.
பாரம்பரியமான விதை உற்பத்தித் தொழில்நுட்பத்தில் தேர்வு விதைகளை விவசாயிகள் தங்கள் மதிநுட்பத்தால் பெருக்கி வந்தனர். ருசி, மணம், அளவு பார்த்து நன்றாக விளைந்த பழங்களைக் கொண்டு விதைத் தேர்வு செய்தனர்.
அடுத்தபடியாக ஒட்டுக்கட்டும் முறையையும் விவசாயிகளே கடைப்பிடித்தனர். வீரிய ஒட்டுக்கட்டும் முறை வந்தது. "ஜீன்' மாற்ற உத்தி வந்தது. ஒட்டுக்கட்டும்போது எதை எதையெல்லாம் பயன்படுத்தலாம் என்ற ஒழுங்குமுறை, விதியில் மாற்றம் வந்தது.
தாவர அணுக்களை மற்றொரு தாவர அணுவுடன் சேர்க்கும் ஒட்டு முறையை வரவேற்கலாம். ஆனால் நாய்த்தோல், குதிரை முடி, பன்றித்தோல் ஆகியவற்றின் புரத அணுக்களைத் தக்காளிக்குரிய அணுவுடன் சேர்த்தால் அது விபரீத விஞ்ஞானம் அல்லவா? சுத்த சைவர்களுக்கு அசைவத் தக்காளியை வழங்கும் விஞ்ஞானத்தை நாம் போற்றுவதா? தூற்றுவதா? இப்படிப்பட்ட விபரீத விஞ்ஞானத்தில் விளைந்த விதைகளுக்குக் காப்புரிமையும் உண்டு. இப்படிப்பட்ட தக்காளி பறித்துப் பலநாள் ஆனாலும் கெடாது. உண்மைதான். அதை உண்டால் வயிறு கெட்டுப்போகிறதே. இதயம் கெட்டுப் போகிறதே. இதற்கு அந்த விஞ்ஞானத்தில் பதில் உண்டா?
புதிய தொழில்நுட்பத்தில் பிறந்த போண்டாத் தக்காளியுடன் போட்டியிட்டு இன்னமும் புளிப்புத் தக்காளி / நாட்டுத்தக்காளி ரகங்களை திண்டுக்கல், கிருஷ்ணகிரி நகரங்களைச் சுற்றியுள்ள விவசாயிகள் காப்பாற்றி வருவதைப் பாராட்ட வேண்டும். அங்காடி மதிப்பு காரணமாக நாட்டுத் தக்காளி சாகுபடி செய்வோர் தொடர்ந்து பயிரிட்டு வருவதைக் கவனிக்கலாம்.
நோய்பரப்பும் ஜீன் மாற்ற விதைகளைப் பற்றிப் பதறும் நேரத்தில் நமது பாரம்பரிய விதைகளின் கதைகளை அறிவது நன்று. "பல்லுயிர்ப் பெருக்கத்தின் தந்தை' என்று போற்றப்படும் ரஷிய விஞ்ஞானி நிகோலாய் இவனோவிச் வாவிலோவுடன், வாவிலோவின் மாணவர்களின் துயரக்கதைகளே அவை.
உணவுப் பயிர்களின் தோற்ற மையங்களை வாவிலோவ் கண்டுபிடித்தார். வாவிலோவ், லெனினின் பேராதரவு பெற்ற மாபெரும் விவசாய விஞ்ஞான மேதை. 1929-இல் வாவிலோவுக்கு வேளாண் விஞ்ஞான அகாடமியின் முதல் தலைவர் என்ற பொறுப்பை லெனின் வழங்கினார்.
கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் அல்லாத ஒரு உலக விஞ்ஞானி பெற்ற முதல் மரியாதை. வாவிலோவ் தாவர இயலில் மரபியல் துறை மேதை என்பதால், இவர் புகழ் லண்டன், பாரீஸ், நியூயார்க் வரை பரவியிருந்ததுடன் ஏராளமான வெளிநாட்டு விஞ்ஞானிகளும் இவருக்கு மாணவராயிருந்தனர்.
இவருடைய பல கண்டுபிடிப்புகளில் முதன்மையானது உணவுப் பயிர்களின் தோற்ற மையங்களே. உலகம் சுற்றி இவர் கண்டுபிடித்த தோற்ற மையங்கள் கொலம்பஸ் கண்டுபிடிப்புக்கு இணையானது.
இரண்டாவதாக, மரபியல் துறையில், மென்டலிய விதிகளை மறுத்து, தாவர உயிர்மங்களின் பாரம்பரிய மூலக்கூறு ஒழுங்கற்றும் செயல்படும் என்று நிரூபித்தவர். தாவர மரபியல் துறையில் இவரின் கண்டுபிடிப்புகள் கலிலியோவுக்கு நிகரானவை. கலிலியோவுக்குக் கிடைத்த தண்டனை இவருக்கும் கிடைத்தது. காரணம் விஞ்ஞானமல்ல. டார்வினை விமர்சித்தார் என்று லிசங்கோ குற்றம்சாட்டி, தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு என்றும் கூறப்பட்டாலும்கூட, ஸ்டாலின் பார்வையில் வாவிலோன், லெனின் ஆதரவாளர் என்பதால் ஆள் நடமாட்டமே இல்லாத சைபீரியச் சிறைச்சாலைகளில் ஒன்றில் ஆயுள் தண்டனைக் கைதியாகி மரணமுற்றார். எனினும் இவரது மகத்தான சாதனை உணவுத் தாவரங்களின் 12 தோற்ற மையங்களை அடையாளப்படுத்தியதே.
நெல் என்றால் அதன் தோற்றம் இந்தியா - சீனா, கோதுமை என்றால் மெசபடோமியா, மக்காச்சோளம் ஆப்பிரிக்கா, வேர்க்கடலை பிரேசில், உருளைக்கிழங்கு அன்டஸ் (தென் அமெரிக்கா) என்றெல்லாம் பேசப்படுவதற்கு வாவிலோவ் மூலகர்த்தா. நெல் என்றால் அதன் காட்டு ரகம் பூர்வத்தோற்றத்தை விளக்கும். அப்படிப்பட்ட மூலாதார விதைகளையும், நாட்டு ரகங்களையும், கோதுமை, பார்லி, ரை ஓட்ஸ் ரகங்களின் பூர்வத்தோற்ற விதைகள் - பாரம்பரிய விதைகள் எல்லாவற்றையும் சேகரித்தவர்.
வாவிலோவ் விதை ஆராய்ச்சிப் பண்ணை பீட்டர்ஸ்பர்க்கில் இருந்தபோது, இரண்டாவது உலகப்போரில் ஹிட்லரின் வெற்றிப்படலத்தின் இறுதிக்கட்டமாக சோவியத் ரஷியப் படையெடுப்பு நடந்தது. பீட்டர்ஸ்பர்க் முற்றுகையிடப்பட்டுப் பின்னர் ஜெர்மன் படை பின்வாங்கியபோது வாவிலோவ் விதை வங்கியில், வாவிலோவின் உதவி விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் பட்டினியால் உயிர் துறந்து பிணமாகக் கிடந்த காட்சி ஜெர்மன் ஜெனரலை உலுக்கியதுடன் வியப்படைய வைத்தது.
அங்கு திரிந்து கொண்டிருந்த ருஷியச் சிறுவனைப் பார்த்து இவ்வாறு கேட்டார்: ""இந்த விதை வங்கியில் ஏராளமாக கோதுமை, பார்லி, ஓட்ஸ் ரை உள்ளபோது, இந்த ஊழியர்கள் எப்படிப் பட்டினியால் இறந்தனர்?'' அந்த ருஷியச் சிறுவன், ""இவை விதைகள். இந்த விதைகள் சாகாவரம் பெற்றவை. நாங்கள் ஒருநாள் சாகப்போவது நிஜமே. சாகாவரம் பெற்ற இந்த விதைகள் இனி பிறக்கப்போகும் சந்ததிகளுக்கு உதவும் என்று அவற்றை உண்ணாமல் பட்டினியால் இறந்து விட்டனர்...'' என்று பதில் கூறியதைத் தன் நாட்குறிப்பில் பதிவு செய்து கொண்டாராம்.
இரண்டாவது உலகப் போரால் அழிக்க முடியாத பாரம்பரிய விதைகளைப் பசுமைப்புரட்சி அழித்த விவரம் இன்னமும் சோகமானது அன்றோ! பாரம்பரிய விதைகளை அப்புறப்படுத்திவிட்டுப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வீரிய ரக விதைகளினால் குறிப்பிட்ட அளவில் அரிசி உற்பத்தி உயரவும் இல்லை.
பல இடங்களில் பாரம்பரிய விதை விளைச்சலை விட வீரியரக விதை விளைச்சல் குறைவுதான். போதிய வைக்கோலும் அறுவடையாகவில்லை. குறுகியகாலப் பயிர் என்பதால் பாரம்பரிய ரக விதை கொண்டு ஒரு போகம் எடுத்த இடங்களில் 2 போகம் எடுக்கப்பட்டிருக்கலாம்.
நாம் ஆசை ஆசையாய் விரும்பிச் சாப்பிட்ட ஆற்காடு கிச்சடி, வையக்குண்டா, குதிரைவால், தங்கச்சம்பா, டொப்பிச்சம்பா, சீரகச்சம்பா, ஆனைக்கொம்பன், கார்சம்பா, கார்த்திகைச்சம்பா, ஆத்தூர் கிச்சடி, சிறுகமணி, செங்காரி, பூனைக்காரி, கட்டைச்சம்பா, பிசாளம் எல்லாம் அழிந்துவிட்டன. பாரம்பரிய ரகம் என்று எண்ணப்படும் பொன்னி, உண்மையில் தைச்சுங் என்ற ஐ.ஆர். ரகத்துடன் ஆற்காடு கிச்சடி கலப்பான ரகம். பொன்னியில் ஆற்காடு கிச்சடிக்குரிய மணம் காப்பாற்றப்பட்டு பாரம்பரியம் மீட்கப்பட்டது.
ஐ.ஆர்.8 அரிசியுடன் ஆற்காடு கிச்சடி கலந்து உருவான ஐ.ஆர்.20-இல் கிச்சடிச்சம்பாவின் குணம் மீட்கப்பட்டாலும், இன்று ஐ.ஆர்.20 அழிந்துவிட்டது. ஏடிட்டி-36 ரகம் அங்காடியில் ஐ.ஆர்.20 - என்று விற்கப்படுகிறது. இவ்வாறே பாபட்லா என்ற ரகம் பொன்னி என்று விற்கப்படுகிறது. விவரமறிந்தவர்கள் ஏமாறுவதில்லை.
காய்கறிப் பயிர்களில் நிறைய ரகங்கள் உள்ளன. மிகவும் மணம் நிரம்பிய நார் இல்லாத பச்சை அவரைக்காய் உண்டு. வெண்டையில் வெள்ளை ரகம் அழிந்து வருகிறது. வெள்ளைரக வெண்டையில் மெல்லிய ரகம் தடிம ரகம் உண்டு. குறிப்பாக தடிம ரக வெண்டை (நார் இல்லாதது). மோர்க்குழம்புக்கு ஏற்றது. இப்போது சுத்தமாக அற்றுவிட்டது. பச்சை வெண்டை ஹைபிரீட் மட்டுமே உள்ளது.
கத்தரிக்காயிலும் நிறைய ரகங்கள் உள்ளன. சென்னையைச் சுற்றி முன்னொரு காலத்தில் மிகவும் ருசியான ஊதா நிறப் பொடிக் கத்தரிக்காய் சாகுபடியானது. இதைச் சிலர் எண்ணெய்க் கத்தரிக்காய் என்பார்கள். பருப்பு ரசத்திலும் இடப்படும். சிலர் ரசக்கத்தரிக்காய் என்பார்கள். இன்று சற்றுப் பெரிய அளவில் விற்கப்படும் இக் கத்தரிக்காய் சுண்டைக்காய் போல் கசப்பது ஏன்?
கத்தரிக்காயில் மிகவும் ருசியான முள்கத்தரிக்காய் வேலூர், ஆற்காடு அங்காடிகளில் உண்டு. திண்டுக்கல் பச்சைக்கத்தரிக்காய், திருநெல்வேலி வெள்ளைக் கத்தரிக்காய் அலாதியான ருசியுள்ளவை. இவையெல்லாம் அருகி வருகின்றன. இன்று மஹைக்கோ - மான்செண்டோவின் ஹைப்ரீட் நாமக் கத்தரிக்காய்தான் அங்காடியில் அதிகம் விற்பனைக்கு வருகின்றன.
வேர்க்கடலையில் முன்பெல்லாம் கொடி ரகம் சாகுபடியானது. கொடி ரகத்தில் மூன்று பருப்புள்ள கடலை அறுவடையாகும். தமிழ்நாட்டில் அருகிவிட்டது. குஜராத்தில் எஞ்சியுள்ளது. மூன்று விதைப் பருப்புக்கு அமெரிக்காவில் நல்ல விலை உண்டு. கையால் உரிபடும் கடலை என்று ஏற்றுமதியாகும். இந்த ரகத்தின் சிறப்பு குறைந்த எண்ணெய் விகிதம். கடலை மிட்டாய்க்கு ஏற்றது. இந்த மிட்டாய் ரகமும் அருகிவிட்டது.
உலகப்போரால்கூட அழிக்க முடியாத பாரம்பரிய விதைகளைப் பசுமைப்புரட்சி அழித்துள்ள நிகழ்ச்சி வரலாறின் சோகம் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் இந்தியக் கதை இன்னமும் சோகமானது.
1959-இல் கட்டக்கில் உள்ள மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநராயிருந்த டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதைகளைச் சேகரித்து வைத்திருந்து இந்தியச் சூழ்நிலைக்கு நோய் பரப்பும் ஐ.ஆர்.ஆர். ரக வீரிய நெல் விதை தேவை இல்லை என்று எடுத்துக்கூறி, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் தர கையெழுத்திட மறுத்தார். இதனால் பதவி மாற்றம் செய்யப்பட்டார். இந்த மாற்றம் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் சம்பளம் நிறுத்தப்பட்டது. நீதிக்குப் போராடி வறுமையில் வாடி இறுதியில் நெஞ்சுவலியால் இறந்து போனார்.
டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியாவுக்குப் பின் அதே பதவியை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பெற்ற பிறகுதான் நெல்லில் பசுமைப்புரட்சி "புதிய வேகம்' பெற்றது. ஆனால், டாக்டர் ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த பாரம்பரிய நெல் விதைகள் மாயமாக மறைந்தது எப்படி என்று இன்றளவும் பின்னர் பதவிக்கு வந்த புதிய இயக்குநர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
எனினும் ஒடிசா மாநிலத்தில் ரிச்சாரியா மறைந்து, பசுமைப் புரட்சியின் கரியவிளைவுக்குப் பின் 2010-ஆம் ஆண்டில் (50 ஆண்டுகளுக்குப்பின்) 77 வயதுள்ள நடாபர் சாரங்கி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் சுமார் 400 பாரம்பரிய நெல்ரக விதைகளைச் சேகரித்துள்ளார். அவற்றில் காலஜீரா (கருப்பு சீரகச்சம்பா) பிம்புடிபாசா, ரத்ன சூடி முக்கியமானவை. இவர் சேகரித்துள்ள பாரம்பரிய ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்தும் கேரள மாநிலத்திலிருந்தும் பல விவசாயிகள் சாரங்கியைச் சந்தித்து மருத்துவக் குணமுள்ள நெல் ரகங்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா ஆகியவற்றைக் காப்பாற்றியுள்ளனர்.
மாரியம்மன் கோயில் கோ. சித்தர், ஒடியாவிலிருந்து மருத்துவக் குணமுள்ள நெல் ரகங்களை வாங்கித் தஞ்சையில் விதை வங்கியை உருவாக்கியுள்ளார். சென்னையை மையமாகக் கொண்ட இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ. பாலசுப்பிரமணியமும் அவர் மனைவி விஜயலட்சுமியும் பல நூற்றுக்கணக்கான - மிகவும் அரிதான - அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரித்து சீர்காழியில் விதை வங்கியை உருவாக்கியுள்ளனர்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? என்று கேட்கத் தோன்றினாலும், ஒரு காலத்திலும் முடியாது என்பதைவிட தாமதமான புதிய தேடலை வாழ்த்தி, இதுநாள்வரை பாதுகாத்துப் பயிரிட்டுப் பாரம்பரிய விதை ரகங்களை பரவச் செய்துவரும் அனைத்து விவசாயிகளுக்கும் "நன்றி' என்ற மூன்றெழுத்துக்கு மேல், "பரிசு' என்ற மூன்றெழுத்தை, "அரசு' என்ற மூன்றெழுத்து வழங்கி கௌரவிக்க வேண்டும். வாழ்க பாரதம்.

கண்ணீர் வராத புதிய ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பசுமை நாயகன் www.thagavalthalam.com

        வெங்காயம் விலையைக் கேட்டாமல் மட்டுமே இனி கண்ணீர் வர வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணீர் வராத புதிய ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

      வெங்காயத்தில் இருந்து வெளியாகி கண் எரிச்சலை ஏற்படுத்தும் புரோட்டீன் உற்பத்தியாவதைக் குறைக்கும் வழியை ஏற்படுத்துவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டனைச் சேர்ந்த காலின் ஈடி மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த சிலர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

     வெங்காயத்தில் கண்ணீரை வரவழைக்கும் புரோட்டீனைக் குறைத்து, அதற்கு பதிலாக சல்ஃபர் அளவை அதிகரிக்கும் வகையில் புதிய வெங்காய ரகத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த வெங்காயத்தை பயன்படுத்துவதால் இதய நோய் வருவது தடுக்கப்படுவதுடன் உடல் பருமன் ஆவதையும் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.